19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டி நடைபெற்றபோது நில அதிர்வு உணரப்பட்ட காட்சிகள் இணையதளத்தில் வைரல்.!

0 11739

19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்ற போது நில அதிர்வு உணரபட்ட நிலையில், அக்காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

16 அணிகளுக்கு இடையிலான ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், டிரினிடாட்டின் குயின்ஸ்பார்க் ஓவல் மைதானத்தில் நேற்று அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. அப்போது, நில அதிர்வுகள் உணரப்பட்டதை அடுத்து, பார்வையாளர்கள், வர்ணணையாளர்கள் இருந்த கட்டிடங்கள் சில வினாடிகள் குலுங்கின.

போர்ட் ஆஃப் ஸ்பெயின் பகுதியில் நேற்று 5 புள்ளி 2 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், கிரிக்கெட் மைதானத்தில் உணரப்பட்டுள்ளது. இந்நிலையில், கிரிக்கெட் வீரர்கள் நிலநடுக்கத்தை ஏதும் உணராமல் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்ததால், ஆட்டம் பாதிக்கப்படவில்லை.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments